ஒற்றன்..!

May 2023

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

வடமாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சாள்ஸிற்கு இணைப்புச் செயலாளராக யாரை போடுவது என ஓஎல் படித்த ஊடகவியலாளர் ஒருவர் ஆலோசனை வழங்க ஆரம்பித்துள்ளாராம்.

ஏற்கனவே வடமாகாண ஆளுநராக இருந்த பி.எஸ்.எம் சாள்ஸ் தனது காலத்தில் குடும்ப உறுப்பினர்களை இணைப்புச் செயலாளர், பிரத்தியோகச் செயலாளர்,

ஊடக இணைப்பாளர் என பல்வேறு பதவி நிலைகளில் அமர்த்திய நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

தற்போது வடமாகாண ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் பதவி நிர்வாக நீதியான மற்றும் தனிப்பட்ட பதவி நிலைகளை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது

இவ்வாறு பதவி நிலைகளை வழங்குவதற்கு முன்னேற்பாடாக ஓஎல் படித்த ஊடகவியலாளர் ஒருவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக சிலரின் பெயர்களை முன்மொழிந்துள்ளாராம்.

குறித்த ஊடகவியலாளர் ஏற்கனவே பத்திரிகை நிறுவனம் ஒன்றில் செய்தி களவெடுத்த பிறிதொரு ஊடக நிறுவனத்திற்கு வழங்கியது மட்டுமல்ல குறித்த செய்தியும் தவறு என்பதற்காக ஒரு நாள் சிறையிலும் இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அவர் சார்ந்த அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் கோப்புக்களை திருடிச் சென்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.

அது மட்டுமல்லாது வடமாகாணத்தில் வெளிநாட்டு நீண்டகாலத் திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனை சீனாவின் திட்டம் என எழுதினால் தனக்கு ஊதியம் வழங்காத pdf பத்திரிகையில் முன் பக்கத்தில் எழுதுவதற்கு தூதரகம் ஒன்று பணம் வழங்குவதாக அறியவருகிறது.

இவையெல்லாம் இவ்வாறு இருக்க ஆளுநரின் இணைப்புச் செயலாளராக யாரைப் நியமிப்பது என்பது தொடர்பில் குறித்த நபர் அதிகம் ஆர்வம் படுவதற்கு காரணமும் உள்ளது.

ஆளுநரை வடக்கிற்கு நியமிப்பதில் ஜனாதிபதிக்கு சம்மதம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த நபருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதோடு தனது செய்திகளை போடுவதற்கு ஒரு தொகைப் பணத்தையும் மாதங்களாக சேர்த்து வழங்கி வருகிறார்.

ஆளுநர் பதவியேற்ற நாளிலிருந்து இவரது அலப்பறை தாங்காமல் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சில வேளைகளில் தொலைபேசியை ஓப் செய்து வைக்கிறாராம்.

ஏன் குறித்த நபர் ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவரை போட்டால் நல்லா இருக்கும் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது

வேலை செய்யும் பத்திரிகையில் சம்பளம் இல்லை வேற பத்திரிகைகளுக்கு செல்ல முடியாது ஏற்கனவே திருட்டு கூட்டங்களுக்கு செல்ல முடியாது நேரமில்லையாம்.

ஆகையால் தனக்கு சார்பான ஒருவரை நியமித்தால் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து அனுப்புவதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறார்.

அவ்வாறே குறித்த நபர் வழங்கிய ஆலோசனைப்படி ஒருவர் நியமிக்கப்பட்டால் ஆளுநர் அலுவலகம் சந்தி சிாிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதோடு pdf பத்திரிகையில் பொய் புளுட்டுக்கள் வராது சில வேளை உண்மை செய்திகளும் வெளிவர வாய்ப்புள்ளது.

இந்த ஊடகவியலாளர் பற்றி அறியாத பல முகங்களும் இருக்கிறது தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்.கூட்டுறவு தலைமையகத்தில் பியோனாக வேலைக்கு சென்றார்.

வேலைக்கு சென்று ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தனது பரம்பரைத் தொழிலான போட்டுக் கொடுக்கும் வேலையை அப்போதைய விடுதலைப் புலிகளின் நிர்வாக பிரிவுக்கு தகவல் வழங்கினார்.

தகவல் பிழைத்தது தலைமையகத்தில் இருந்து சாதாரண சங்கக் கடை ஒன்றுக்கு வேலை மாற்றம் சென்றார்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் ஒருவனுடைய வளர்ச்சிக்கு கல்வித் தகமை என்பது தடையல்ல

ஆனால் மூளை வளர்ச்சி இல்லாதவர்களுக்கு சில விடையங்களை பகுத்தறியும் ஆற்றல் குறைவு என்கிறது விஞ்ஞானம்.

ஆனால் இந்த ஊடகவியலாளரின் செயற்பாடு பத்திரிகை நிறுவனத்தில் களவடுப்பது ஒரு செய்தியை திரிவுபடுத்துவது குல தொழிலாகவே காணப்படுகிறது.

இதற்கு உதாரணமாக அந்த pdf பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு தூதரகம் ஒன்றின் செய்தியை போடுமாறு ஒரே குடைச்சல்.

ஆனால் அந்த ஆசிரியரோ அந்த தூரகத்தின் பெரிய விசுவாசி என தனக்குள்ளே ஒரு இறுமாப்பு ஆனால் அவர்கள் இவர்களை கணக்கெடுப்பதில்லை.

ஊடகவியலாளரின் குடைச்சல் தாங்க முடியாமல் அவர் வழங்கிய செய்தியை ஆசிரியாக தலையங்கத்தில் எழுதி விடுவோம் என முடிவெடுத்தார் அதில் தான் சுவாரசியம் நடந்தது.

ஆசிரியர் தலையங்கம் என்பது அந்தப் பத்திரிகையினுடைய பிரதம ஆசிரியர் அன்றைய நாளில் இடம் பெற்ற ஒரு சம்பவம் அல்லது முக்கியமான ஏதாவது விடயங்கள் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தும் கருத்து பக்கம்.

ஆனால் குறித்த ஆசிரியர் தனது ஆசிரியர் தலையங்கம் எழுதி முடித்ததும் இந்த தகவலை இன்னார் தான் வழங்கினார் என பெயரையும் குறிப்பிட்டு எழுதிய சுவாரசியமும் pdf பத்திரிகையில் தான் நடந்தது.

யாழ்பாணத்தில் வெளிவருகின்ற எந்த ஒரு பத்திரிகையிலும் ஆசிரியர் பகுதியில் இன்னார் சொன்னார் என பெயர் குறிப்பிட்டு எழுதிய வரலாறு இல்லை ஏனெனில் அந்தப் பக்கம் ஆசிரியரின் கருத்து மட்டுமே பதிவிட முடியும்.

ஏன் இந்த ஆசிரியர் இவ்வாறு செய்தார் என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இவர் என்னையும் தூதரகத்தையும் மூட்டி விடப் போகிறார் என்பதை ஆசிரியர் ஏற்கனவே அறிந்து விட்டதால் இந்த தகவலை இந்த ஊடகவியலாளர் தான் தந்தார் என கட்சிதமாக எழுதிவிட்டார் .