தமிழா்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக போராட தயாராகும் யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழா்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக போராட தயாராகும் யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள்..

ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி மக்கள் எழுச்சிக்கு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ் எழுச்சிப் போராட்ட பேரணிக்கு தமிழர் பேசும் மக்கள் அனைவரையும் பல்கலை க்கழகத்தில் ஒன்று திரளுமாறும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மாணவர்

ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்றினை எதிர் வரும் 16/03/2019 அன்று  முன்னெடுக்க தீர்மானத்துள்ளோம். 

எனவே நீதி கோரி இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்களினை அலைகடலென திரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கிறோம்.

 தமிழ் மக்களினை அணிதிரட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை வேண்டிக் கொள்கிறோம்.

இனத்திற்காக நீதி கோரி அணிதிரள்வோம்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவை இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது. 

அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் ஈழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு, 

போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களிற்கு பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினனை முன்னெடுக்க வேண்டும்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிய நிலையிலும் 

ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்றினை எதிர் வரும் 16/03/2019 அன்று  முன்னெடுக்க தீர்மானத்துள்ளோம். 

எனவே நீதி கோரி இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்களினை அலைகடலென திரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கிறோம். 

தமிழ் மக்களினை அணிதிரட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை வேண்டிக் கொள்கிறோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு