7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது..

ஆசிரியர் - Editor I
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது..

7 வயது சிறிமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்ப டுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செ ய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் கூறியு ள்ளனர்.

"கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தியுள்ளார். அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுவன் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரமே சிறுமி, பாடசாலையில் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அதுதொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார். 

சிறுமி 5 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு