ஐ.நாவில் வாய்பாா்க்க போகிறவா்களும், பக்க நிகழ்வுகளுக்கு போகிறவா்களும், கொக்காிக்க கூடாது..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவில் வாய்பாா்க்க போகிறவா்களும், பக்க நிகழ்வுகளுக்கு போகிறவா்களும், கொக்காிக்க கூடாது..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எந்த பிரதிநி தித்துவமும் இல்லை. இந்நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும், வழங்ககூடாது. என தமிழ்தேசிய கூட்டமைப்பினால் என்ன செய்ய முடியும்?

உண்மை இதுவாக இருக்க இங்கிருந்து ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்குச் செல்லும் சிலா் அங்கு பக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு, இங்குவந்த கொக் காிப்பதுடன், ஊடகங்களுக்கு செய்தியும் கொடுக்கின்றனா். 

மேற்கண்டவாறு தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மா வை சேனாதிராஜா கூறியுள்ளாா். 

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வர்­க­ளுக்­கான விடுதி, ஒட்­சி­சன் வழங்­கும் நவீன ஆய்வு கூடம் என்­ப­வற்­றைத் திறந்து வைக்­கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இ ந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­ வித்­துள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இத­னைத் தெரி­வித்­துள்­ளார். ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அமைச்­சர்­கள், 

தீர்­மா­னத்­துக்கு கட்­டுப்­பட்­டுச் செயற்­ப­ட­வேண்­டும் என்று இணக்­கம் தெரி­வித்­துள்­ள­ னர். இலங்­கைக்கு கால அவ­கா­சம் கொடுங்­கள் என்று நாம் ஒரு­போ­தும் கேட்­ட­தில் லை. அவ்­வாறு சொன்­ன­தும் இல்லை. 

ஆனால் இங்­குள்ள சிலர் நாம் கால அவ­கா­சம் பெற்­றுக் கொடுத்­து­விட்­டோம் என்று கூறு­கின்­றார்­கள். அறிக்கை விடு­கின்­றார்­கள். அவர்­கள் முத­லில் ஒன்­றைத் தெரிந்து கொள்­ள­வேண்­டும்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு பிர­தி­நி­தித்­து­ வ ம் இல்லை. அங்கு உறுப்­பி­னர்­க­ளாக உள்ள நாடு­களே இத­னைத் தீர்­மா­னிக்­கின்­றன. இங்­கி­ருந்து செல்­லும் சிலர் அங்கு ஓர­மாக அறை­க­ளில் கொக்­க­ரித்­து­விட்டு 

தங்­கள் பேச்­சுக்­க­ளும் அங்கு எடு­பட்­ட­தாக நினைத்து ஊட­கங்­க­ளுக்­குச் செய்தி கொ டுக்­கின்­ற­னர். இலங்கை அரசு போர்க்­குற்ற விசா­ரணை உள்­பட பல விட­யங்­க­ளைச் செய்­வ­தாக உறு­தி­ய­ளித்தே ஐ.நா. தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது.

இலங்­கையை ஐ.நா. பாது­காப்­புச் சபைக்கு கொண்டு செல்­ல­வேண்­டும் என்று சிலர் கூறு­கின்­ற­னர். அது முடி­யுமா? வீட்டோ அதி­கா­ரம் உள்ள நாடு­க­ளில் சீனா­வும் இருக்­ கின்­றது. அத­னைத் தாண்டி செயற்­பட முடி­யுமா? 

இவர்­கள் சொல்­வது போல நடந்து கொண்­டால், இலங்கை அரசு ஐ.நா. தீர்­மா­னத்­தி­லி­ ருந்து விலகி முழு வெற்­றி­ய­டைந்து விடும். ஒரு நாட்­டுக்கு எதி­ரான தீர்­மா­னம் கொ ண்டு வரப்­ப­டும்­போது உலக நாடு­கள் ஏற்­றுக் கொள்­கின்­றது 

என்­றால் அதன் அர்த்­தத்தை நாங்­கள் விளங்­கிக் கொள்­ள­வேண்­டும் -– என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு