தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவருக்கு நடந்த கதி, பெருமளவு பட்டாசுகள் எாிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவருக்கு நடந்த கதி, பெருமளவு பட்டாசுகள் எாிந்து நாசம்..

யாழ்.குருநகா் பகுதியில் தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவா் கை யில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

யாழ். குருநகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திரு விழா இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் பட்டாசு கொளுத்திய போது அவரின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் எரிகாயம் ஏற்பட்டுள்ளது.

பெருமளவான பட்டாசுகள் இந்த சந்தர்ப்பத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு