13, 14 வயது சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் சிக்கியது..

ஆசிரியர் - Admin
13, 14 வயது சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் சிக்கியது..

காத­லிப்­ப­தா­க ஏமாற்றி, 13 மற்­றும் 14 வய­து சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோக த்துக்கு உள்­ளாக்­கினர் என்ற குற்றச்சாட்டில், 3 இளை­ஞர்­களை கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 

சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 14 வய­துச் சிறு­மி­யைக் காண­வில்லை என்று அவ­ரது தாயார் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். மறு நாள் சிறுமி வீதி­யால் சென்­ற­தை தயார் கண்­டுள்­ளார். சிறு­மியை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னார்.

அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து தாவ­டி­யைச் சேர்ந்த 17 வயது இளை­ஞன் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை தெரியவந்­தது. சிறு­மி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் இளை­ஞ­னைக் கைது செய்­துள்­ளோம் என பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 24ஆம் திகதி 13வய­துச் சிறுமி உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று இரவு தாம­த­மாகி வந்­துள்­ளார். அவ­ரி­டம் தாயார் விசா­ரித்­த­போது, சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 18 வயது இளை­ஞன் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார். 

தாயார் முறைப்­பாடு செய்­தார். சிறு­மி­யி­டம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­ துக்கு அமை­வாக 18 வய­து­டைய இளை­ஞ­னைக் கைது செய்­தோம் இந்­தச் சிறு­மியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞன் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார். 

அத­னை­யும் அவர் இப்­போது விசா­ர­ணை­க­ளின்­போது கூறி­யுள்­ளார். அத­னை­ய­டுத்து அந்த இளை­ஞ­னை­யும் கைது செய்­துள்­ளோம் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் குறிப்­ பிட்­ட­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு