முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அவசரமாக கொழும்பில கூடுகிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அவசரமாக கொழும்பில கூடுகிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு..

ஐ.நா மனித உாிமைகள் ஆணையக விவகாரம் மற்றும் புதிய அரசியலமைப்பு விவ காரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடா்பில் ஆராய்வதற்கும், தீா்மானங்களை இயற்றுவதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கொழும்பில் 5ம் திகதி கூடவுள்ளது. 

புதிய அர­ச­மைப்­பில் முக்­கிய விட­யங்­க­ளான தேர்­தல் முறைமை, நிறை­வேற்று அதி­ கா­ரம் என்­பன தொடர்­பில் கட்­சி­கள் இடையே பொது இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில் லை.

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் மட்­டும் கட்­சி­கள் இடையே இணக்­கப்­பாடு  ஒரு­மித்த கருத்து நில­வு­வ­தால், அதி­கா­ரப் பகிர்வை மட்­டும் அர­ச­மைப்­பி­னுள் எப்­படி புகுத்­து­வது அத­னைச் செயற்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் ஆராய்ந்து 

அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 4 பேர் கொண்ட புதிய குழு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்­று­முன்­தி­னம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு மேலும் இரண்டு ஆண்­டு­கள்

கால அவ­கா­சம் வழங்­கும் வகை­யி­லான தீர்­மான முன்­வ­ரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்பு, ஐ.நாவின் கால அவ­கா­சம் ஆகி­யவை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 

வெவ்வேறு நிலைப்­பா­டு­க­ளில் உள்­ள­னர். இந்­நி­லை­யில், இவை தொடர்­பில் விலா­வா­ ரி­யாக ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எதிர்­வ­ ரும் 5ஆம் திகதி கொழும்­பில் கூடு­கின்­றது.

5ஆம் திகதி பிற்­ப­கல் ஒரு மணிக்கு நாடா­ளு­மன்­றம் கூடு­கின்­றது. அதற்கு முன் காலை ­ யில் அல்­லது மாலை­யில் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நடை­பெ­றும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு