தமிழீழம் ஒரு கனவு மட்மே, அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. மீண்டும் இனவாதம் கக்கும் சம்பிக்க..

ஆசிரியர் - Editor I
தமிழீழம் ஒரு கனவு மட்மே, அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. மீண்டும் இனவாதம் கக்கும் சம்பிக்க..

தமிழீழம் ஒருபோதும் மலராது அல்லது தமிழீழ கனவு ஒருபோதும் பலிக்காது. ஆகவே கிடைக்கும் சந்தா்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையாக வாழ பாருங்கள், நனவாகாத கனவை நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. 

அத்துடன் வடக்கு மக்களுக்கு அபிவிருத்திக்கான பாதையை உருவாக்கிக்கொடுத்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண் டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜாதிகஹெல உறுமைய கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெ ற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றமை மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் அவை எதுவு மே யுத்த திட்டமிட்ட அழிப்பு அல்ல. போர்க்குற்றச்சாட்டில் இராணுவத்தை தண்டிக்க வேண்டுமெ ன்றால் அதே குற்றங்களில் விடுதலைப்புலிகளையும், 

இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும்.  ஆகவே உண்மை களை கண்டறிவது விடுத்து தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு