850 பொலிஸ் உத்தியோத்தா்கள் இருந்தால் வடக்கில் குற்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படுமாம்..

ஆசிரியர் - Editor I
850 பொலிஸ் உத்தியோத்தா்கள் இருந்தால் வடக்கில் குற்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படுமாம்..

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞசர், யுவதிகள் முன்வரவேண்டும்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரும் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர். 

இதனால் மேலதிக பொலிஸார் எமக்கு தேவையாக உள்ளார்கள். நாளை (இன்று) வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை நான் சந்திக்க உள்ளேன். அவரிடம் இவ்விடயம் தொடர்பில் பேசஉள்ளோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு