ஹா்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் எனக்கோாி யாழ்ப்பாணத்தில் சிங்கள ஊழியா்கள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
ஹா்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் எனக்கோாி யாழ்ப்பாணத்தில் சிங்கள ஊழியா்கள் அட்டகாசம்..

ஹா்த்தாலுக்கு ஆதரவு தொிவித்து தபாலகத்தை மூடக்கூடாது. என சிங்கள ஊழியா்கள் கூறியதால் தமிழ் ஊழியா்களுக்கும் சிங்கள ஊழியா்களுக்குமிடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், யாழ்.பிரதான தபாலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வடமாகாணம் ரீதியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு 

ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டம் முடங்கியுள்ள நிலையில தபால் சேவையினை செய்யுமாறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்ததால் 

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. சேவையைச் செய்யாது விட்டால் பொலிஸ்காரரை அழைக்கவேண்டி வரும் 

என்று பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் தெரிவித்து சேவையைச் செய்யுமாறு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை மிரட்டியுள்ளார்.

இதனால் காரைநகருக்கான தபால் சேவை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு