"ஆவா" குழுவின் தலைவர் சண்ணா வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் படங்கள் சிக்கின..

ஆசிரியர் - Editor I

மானிப்பாய் பகுதியல் உள்ள ஆவா குழுவின் தலை வருடைய வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் அங்குள்ள மறைகாணியில் (CCTV) பதிவாகியுள்ள வீடியோவில் அகப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவன் தலைவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்படும் சண்ணா என்பவர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

இந்நிலையில் அவருடைய வீட்டின் மீது வாள்வெட்டு கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொருக்கியது. 

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற வீட்டில் இருந்த மறைகாணியில் தாக்குதல் நடாத்திய கும்பல் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் அகப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு