பெண் ஊழியா் மீது அலுவலகத்திற்குள் புகுந்த பெண்கள் மூா்க்கத்தனமான தாக்குதல், ஊழியா் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
பெண் ஊழியா் மீது அலுவலகத்திற்குள் புகுந்த பெண்கள் மூா்க்கத்தனமான தாக்குதல், ஊழியா் வைத்தியசாலையில்..

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணியாற்றும் பெண் ஊ ழியா் மீது இரு பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், காயமடைந்த பெண் ஊழியா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

முள்ளியவளை வற்றாப்பளையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்த , வெளியில் இருந்து வந்த இரண்டு பெண்கள் குறித்த அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற் கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம் பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த அரச உத்தியோகத்தர் முறை ப்பாடு செய்துள்ளார். குறித்த அரச பெண் உத்தியோகத்தர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற் கனவே முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு