வடமாகாணம் நாளை முடக்கப்படுகிறது, பாடசாலைகள், போக்குவரத்து சேவைகளும் நாளை இடம்பெறாது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் நாளை முடக்கப்படுகிறது, பாடசாலைகள், போக்குவரத்து சேவைகளும் நாளை இடம்பெறாது..

காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ள பூரண ஹா்த் தால் மற்றும் பாாிய மக்கள் போராட்டத்திற்கு வடக்கில் உள்ள சகல பொது அமைப்புக்கள், வா்த் தக அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில், 

வடமாகாணம் நாளை பூரணமாக முடக்கப்படும். எனவும் அத்தியாவசிய தேவைகள், பொருட்கள் கொள்வனவு இருப்பின் அதனை இன்றே செய்யுங்கள். என வா்த்தகா் சங்கங்கள், அமைப்புக்கள் பொதுமக்களுக்கான அவிறித்தல் ஒன்றையும் விடுத்திருக்கின்றாா்கள். 

வர்த்­தக மற்­றும் போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் எவை­யும்இடம்­பெ­றாது என்­ப­து­டன், அலு­வ­ல­கங்­கள், பாட­சா­லை­க­ளும் முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என்று வலி­யு­றுத்­தி­யும், 

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளால் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்­டம் இரண்டு ஆ ண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும் நாளை திங்­கட்­கி­ழமை வடக்கு மாகாண முழு­வ­தும் மு ழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, காலை 8.30 மணிக்கு கிளி­நொச்­சி­யில் கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் முன்­னெ­டுக்­ கப்­ப­ட­வுள்­ளது. இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ் மற்­றும் முஸ்­லிம் அர­சி­யல் கட்­சி­கள் ஆத­ரவு வெளி­யிட்­டுள்­ளன. சிவில் அமைப்­புக்­க­ளும் தாங்­கள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வோம் 

என்று அறி­வித்­துள்­ளன. இத­னால் வடக்கு மாகா­ணத்­தில் நாளைய தினம் போக்­கு­வ­ரத்­துச் சேவை­ கள், வர்த்­தக, வணிக, வங்­கிச் சேவை­கள் இடம்­பெ­றாது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆசி­ரி­யர் தொழிற்­சங்­கங்­க­ளும் நாளைய போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

இத­னால் பாட­சா­லை­க­ளில் கல்வி நட­வ­டிக்­கை­யும் முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அலு­வ­ல­கங்­க­ளின் செயற்­பா­டு­க­ளும் இடம்­பெ­றாது என்று கூறப்­ப­டு­கின்­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு