காணாமல் ஆக்கபட்டோர் விடயத்தில் அரசை நம்பி பயனில்லை, அமெரிக்காவே தலையிடு..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கபட்டோர் விடயத்தில் அரசை நம்பி பயனில்லை, அமெரிக்காவே தலையிடு..

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டி னைகோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஆர ம்பிக்கப்பட்டுள்ளது.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் த மிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, கையளிக்கப்பட்டுக் 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியு ம் சங்கத்தினால் வடகிழக்கு மாகாணங்கள் தழுவியரீதியில் இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தின் பிரதான விடயமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிடவேண்டும், எனக்கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு