நாக விகாரை விடுதியின் மலக்கழிவுகள் வடிகாலுக்குள் விடப்படுகிறது, கண்ணை மூடிக் கொண்டிருக்கிறதா மாநகரசபை..?

ஆசிரியர் - Editor I
நாக விகாரை விடுதியின் மலக்கழிவுகள் வடிகாலுக்குள் விடப்படுகிறது, கண்ணை மூடிக் கொண்டிருக்கிறதா மாநகரசபை..?

யாழ்.ஆாியகுளம் நாகவிகாரைக்கான விடுதியின் மலக்கழிவுகள் அருகில் உள்ள வடிகாலுக்குள் கலக்க விடப்படுவதால் யாழ்.நகாில் பாாிய சுகாதார சீா்கேடு நிலவுதாக யாழ்.மாநகரசபையின் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

இச் சுகாதார சீர் கேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்தியுள்ள போதும் உடன் நடவடிக்கை எடுக்க யாழ்.மாநகர சபை நிர்வாகத்திற்கு மறுத்துவருவதாகவும் அவர்கள் மேலும் குறை கூறியுள்ளனர்.

யாழ்.மாநக சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் ஆரியகுளப் பகுதியல் உள்ள நாகவிகாரையின் விடுதியில் உள்ள மலசல கூடங்களின் மலக் கழிவுகள் அருகில் உள்ள வடிகாலுக்குள் நேரடியாக விடப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கூறியுள்ள போதும், நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

இதனால் யாழ்.நகரப் பகுதியில் தொடர்ந்தும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடியவகையில் வெளிப்படையாக மலக் கழிவுகள் திறந்துவிடப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு குறித்த கடிகாலுக்குள் மலக்கழிவு வெளியேற்றுவதற்காக வரும் குழாய் நிரந்தரமாக எங்களால் அடைக்கப்படும் என்றனார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு