கொள்ளையடித்த பணத்தில் சுகபோக வாழ்க்கை, வீடு புகுந்து பொருட்களை அள்ளிய பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
கொள்ளையடித்த பணத்தில் சுகபோக வாழ்க்கை, வீடு புகுந்து பொருட்களை அள்ளிய பொலிஸாா்..

யாழ்ப்பாணம்- சாவகச்சோி நகா்பகுதியில் உள்ள உணவகத்தில் கொள்ளையிட்ட பணத்தில் கொ ள்ளைக்காரன் வாங்கிய பொருட்களை பொலிஸாா் பறிமுதல் செய்துள்ளனா். 

சாவகச்சேரி குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி இ.சேந்தன் தலைமையிலான குழுவினர் சகோதர ர்களான இரு சந்தேக நபரிடமும் மேற்கொண்ட கடும் விசாரணைகளின் பின்னர் 

பொருள்களை மீட்டனர். மட்டுவிலைச் சேர்ந்த நபரிடம் ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட நிலையில், 

உடையார்கட்டைச் சேர்ந்த மற்ற சந்தேகநபரிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய தொலைக்காட்சி ,றிசிவர்,அலுமாரி,றைஸ் குக்கர் நான்கு தோடுகள், கதிரை, பூவர் செட் 

மற்றும் திருடிய தினம் பாவித்த ரீசேட் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரில் ஒருவர் ஏற்கனவே கண்டியில் இடம்பெற்ற களவு வழக்கில் பல்லேகலவில் 

உள்ள குண்டகசாலை சிறைச்சாலையில் ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில், இடைநடுவே சிறையிலிருந்து தப்பி வந்த கைதி 

என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைவிட வவுனியாவில் இடம்பெற்ற இரண்டு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் முகநூலின் உதவியுடன் உணவக உரிமையாளரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். 

அதனையடுத்து அவரது சகோதரனும் கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு