முதியவருடைய பணப்பையை எடுத்து சென்ற பெண், மறைகாணியில் மாட்டினாா்..

ஆசிரியர் - Editor I
முதியவருடைய பணப்பையை எடுத்து சென்ற பெண், மறைகாணியில் மாட்டினாா்..

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த முதியவா் தவறவிட்டு சென்ற பணப்பையி னை எடுத்து சென்ற பெண் மறைகாணியின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளாா். 

சுக­வீ­ன­முற்­றி­ருந்த முதி­ய­வர் ஒரு­வர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிகிச்­சைக்­காக யாழ்ப்பாணம் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

மருத்­து­வ­மனை விடு­தி­யில் சேர்­க்கப்­பட்ட அவர் மதி­யம் உணவு வாங்­கு­வ­தற்­காக தனது பணப் பையைத் தேடி­ய­போது அது காணா­மல் போனது தெரி­ய­வந்­த­தது.

வெளி­நோ­யா­ளர் பிரி­வி­லும் தேடிக் காணாத நிலை­யில் இந்த விட­யம் தொடர்­பில் நிர்­வா­கத்­ துக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த மறை­கா­ணி­க­ளின் பதி­வு­களை சோதித்­த­போது பெண்­ணொ­ரு­வர் வெளி­நோ­யா­ளர் பிரி­வில் காணப்­பட்ட பணப் பையை எடுப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்­பாக மருத்­து­வ­மனை பொலி­ஸார் மூலம் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்யப் பட்டது .

சாவ­கச்­சேரி சங்­கத்­தா­னைப் பகு­தி­யில் வதி­யும் சாவ­கச்­சேரி சந்தை வியா­பா­ரி­யான பெண்­ ணைப் பொலி­ஸார் தேடி வரு­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு