இராணுவம் நிதி சேகாிக்கிறதா? பொய் என்கிறாா் இராணுவ தளபதி, அப்படியானால் இராணு சீரூடையில் நிதி கேட்டது யாா்?

ஆசிரியர் - Editor I
இராணுவம் நிதி சேகாிக்கிறதா? பொய் என்கிறாா் இராணுவ தளபதி, அப்படியானால் இராணு சீரூடையில் நிதி கேட்டது யாா்?


பலாலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சீருடை அணி ந்த இராணுவத்தினரால் சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிதிசேகரிக்கப்ப டுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மறுப்பு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்து ஆலயங்களை புனரமைப்பு உட்பட எந்தவொரு வேலைத்திட்டத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் நிதி சேகரிக்கப்படுவதில்லை மாறாக தென்னிலங்கை மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிபங்களிப்புக்கள் மூலமே எமது மனிதநேய வேலைத் திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாகவும் 

வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். இந்நிலையில் இராணுவத்தினரால் ஆலய புனரமைப்பு பணிக்காக நிதி சேகரிக்கப்படுவதாக வெளியான செய்தி எம்மை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாழ்.மாவட்ட இராணுவ தளபதி என்ற வகையில் நிச்சயமாக இவ்வாறான ஒரு சம்பவமும் கிடையாது. 

ஏனென்றால் அந்த மாதிரியான நிதி சேகரிப்புக்கு எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாம் உத்தரவிடவே இல்லை. எது எப்படி இருந்தாலும் இராணுவத்தினரின் பெயரை பயன்படுத்தி எவரேனும் யாழ்.மாவட்டத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்ற பட்சத்தில் உடனடியாக யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகத்துக்கு தெரியப்படுத்துமாறு வேண்டிகொள்கிறோம். 

இவ்வாறான செய்திகள் கிடைத்தால் யாழ்.கட்டளை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உண்மையை உறுதிப்படுத்துமாறு ஊடகவியலாளர்களை கேட்டுகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு