கொக்குவில்- கருவப்புலம் பகுதியில் தாக்குதல் நடாத்திய வாள்வெட்டு குழு உறுப்பினா்கள் கைது, வாள்கள், கோடாாிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கொக்குவில்- கருவப்புலம் பகுதியில் தாக்குதல் நடாத்திய வாள்வெட்டு குழு உறுப்பினா்கள் கைது, வாள்கள், கோடாாிகள் மீட்பு..

யாழ்.கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்கு தல் நடாத்திய சம்பவத்தில் 4 பேரை சந்தேகத்தின் பெயாில் கைது செய்துள்ளதாகவும், அவா்க ளிடமிருந்து வாள்கள், கோடாாிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸாா் கூறி யுள்ளனா். 

கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று  கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடாத்துயிருந்தது. இதன்போது அங்கிருந்த வாகனங்க ளும் எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை

மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் யாழ் மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வாள்கள் கோடாரிகள் உள்ளிட்ட ஆயுதங்க ளையும் மீட்டுள்ளனர்.  விசேட குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர்களும் அவர் களிடமிருந்து 

மீட்கப்பட்ட ஆயுதங்களையும் கோப்பாய் பொலிஸாரும் ஒப்படைத்துள்ளனர். இதற்கமைய நீதி மன்றில் பிற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின் றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு