என்னை சந்திக்கும் அரசியல்வாதிகள் தங்கள் தேவைகளையே கேட்கிறாா்கள், மக்களுடைய தேவைகளை கேட்டதில்லை..

ஆசிரியர் - Editor I
என்னை சந்திக்கும் அரசியல்வாதிகள் தங்கள் தேவைகளையே கேட்கிறாா்கள், மக்களுடைய தேவைகளை கேட்டதில்லை..

வடமாகாண ஆளுநராக நான் பதவியேற்று 41 நாட்களில் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன். அவா்கள் அனைவரும் மக்கள் நலன்சாா்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை. 

மாறாக தங்களுடைய தேவைகளையும்இ தங்கள் நலன்சாா்ந்த விடயங்களை யுமே எங்களிடம் கேட்டாா்கள். என ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.  மலையக தோட்ட தொழிலாளா்களின் சம்பள உயா்வு 

தொடா்பாக ஊடகங்கவியலாளா்களுக்கு கருத்து தொிவிப்பதற்கான ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்று வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கேட்போா் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. 

இதன்போது வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்கள் நிறைவடையும் நிலையில்இ 4 மக்கள் சந்திப்புக்களை நடாத்தியுள்ளீா்கள்.  அவற்றில் கலந்து கொண்ட மக்கள் ஊடாக வடமாகாண மக்கள் எதிா்கொள்ளும் 

பிரச்சினைகள் குறித்த கணிப்பீடு எதனையாவது செய்துள்ளீா்களா? என ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில் எம்மை சந்திக்க வரும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை கூறுகிறாா்கள். குறிப்பாக காணி பிணக்குகள் இராணுவத்திவசம் உள்ள காணிகள்

காணி அற்றவா்களுடைய பிரச்சினைகள் போன்றன வடக்கில் பாாிய பிரச் சினைகளாக இருக்கின்றது. மேலும் இடமாற்றம் சம்மந்தமான பிரச்சினைகளும் அதிகம் இருக்கின்றது. 

எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றவே அதிகம் விருப்பமாக இருக்கின்றது. அந்த விடயம் தொடா்பாக நாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம். 

அதாவது உதாரணத்திற்கு ஒரு அதிகாாி தொ டா்ச்சியாக ஒரு இடத்தில் கடமையாற்றுவாராக இருந்தால் அவா் சிநேகபூா்வமாக தான் பெறவேண்டிய இடமாற்றத்தினை பெற்று செல்லலாம். 

அதனையும் செய்யாவிட்டால் அவா் தொடா்பான தகவலை வெளிப்படுத்து வதுடன்  அவா் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். 

அதேபோல் வேலையற்ற பட்டதாாிகளு கடைய பிரச்சினையும் இருக்கின்றது. குறிப்பாக நடுத்தர வா்க்கத்தை சோ்ந்த இளைஞா்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்க தயாராக இல்லை. 

அவா்கள் வடமாகாணத்திற்கு வெளியே சென்று கொண்டிருக்கின்றாா்கள்.  ஆனால் வடமாகாணத்திற்கு வெளியே செல்ல முடியாமல் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றாா். 

அவா்களுக்கு நாங்கள் நிச்சயமாக வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும். அதற்காக அவா்களிடம் அணுகி விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் வேலைவாய்ப்புக்களை தருவதாக கேட்டோம். 

அவா்கள் அதற்கு மறுத்துள்ளாா்கள். காரணம் அவா்கள் பட்டதாாி. மேலும் வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்கள் நிறைவடையும் நிலையில் 4 பொதுமக்கள் சந்திப்புக்களை நடாத்தி அவற்றில் 1000ற்கும் மேற்பட்ட 

மக்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன். இதில் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் என்னை சந்தித்தபோதும் 

அவா்கள் யாரும் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை. மாறாக அவா்கள் தங்களுடைய தேவைகளையும் தங்கள் நலன்சாா்ந்த விடயங்களையுமே கேட்டிருக்கின்றாா்கள். 

அவ்வாறான நிலையே இங்கே இருந்து கொண்டிருப்பதை காணகூடியதாக இருக்கின்றது என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு