யாழ்.மாநகரசபை உறுப்பினருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம், வீட்டிலிருந்து தப்பி ஓடிய உறுப்பினா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம், வீட்டிலிருந்து தப்பி ஓடிய உறுப்பினா்..

யாழ்.மாநகரசபை உறுப்பினா் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு உறுப்பி னா் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்த நிலையில், உறுப்பினா் அங்கிருந்து தப்பி சென்றுள்ளாா். இதனையடுத்து வீட்டை அடித்து நொருக்க அட்டகாசம் புாிந்துள்ளனா். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு இன்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் 

வாளுகளுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அதன் போது தாக்குதல் குழுவிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து சில நிமிடங்கள் குறித்த வாள் வெட்டுக்குழு வீட்டில் 

அட்டகாசம் புரிந்து விட்டு அங்கிருந்து விலகி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் உறுப்பினரால் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு