மன்னாா் மனித புதைகுழி, நாளை நீதிமன்றுக்கு வருகிறது காபன் பாிசோதனை அறிக்கை..

ஆசிரியர் - Editor I
மன்னாா் மனித புதைகுழி, நாளை நீதிமன்றுக்கு வருகிறது காபன் பாிசோதனை அறிக்கை..

மன்னாா் சதோச வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் காபன் பாிசோத னை அறிக்கை சட்டவைத்திய அதிகாாி சமிந்த ராஜபக்ஸவினால் நாளை மன்னாா் நீதிமன்ற த்தில் சமா்பிக்கப்படவுள்ளது. 

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கையை பெற்றுக் கொண்டுள்ளார்.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை 

உறுதிபடுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த அறிக்கையில் என்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

எனினும் குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கார்பன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, கையளிக்கப்பட்டதோடு,

குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப் பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு 

அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு