கஞ்சா வைத்திருந்த இருவருக்கு நீதிமன்றம் கடும் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
கஞ்சா வைத்திருந்த இருவருக்கு நீதிமன்றம் கடும் எச்சாிக்கை..

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இருவரு க்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கடுமையான எச்சாிக்கை விடுத்துள்ளதுடன், தண்டமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது. 

கஞ்சாவை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தனித் தனியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து ஒவ்வொருவருக்கும் தலா 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு