பலாலி விமான நிலையம் 3500 அடி நீளமான விமான ஓடு தளத்துடன் பிரமாண்டமாக மாறுகிறது..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையம் 3500 அடி நீளமான விமான ஓடு தளத்துடன் பிரமாண்டமாக மாறுகிறது..

பலாலி விமான நிலையத்தில் ஏ-320, ஏ-321 விமானங்கள் தரை­யி­றங்­கக் கூடிய வகை­யில், பலாலி விமான நிலை­யத்­தின் ஓடு­பாதை 3ஆயி­ரத்து 500 மீற்­ற­ராக விரி­வாக்­கப்­ப­டும். இதன்­மூ­ லம், இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, சீனா, ஜப்­பான், மத்­திய கிழக்கு 

மற்­றும் பல ஐரோப்­பிய நாடு­கள் உள்­ளிட்ட 7 ஆயி­ரத்து 200 கி.மீ சுற்­று­வட்­டத்­துக்­குள் இருக்­கும் நாடு­க­ளுக்­கான நேரடி வானூர்திச் சேவை­களை இங்­கி­ருந்த நடத்த முடி­யும். பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் பலா­லி­யில் நடந்த கூட்­டத்­தில் 

இதற்­கான தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்து அமைச்­சுத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ஓடு­பாதை அபி­வி­ருத்­தியை முன்­னு­ரிமை கொடுத்து முதற்­கட்­ட­ மாக மேற்­கொள்­ளு­மாறு தலைமை அமைச்­சர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அரு­கில் உள்ள கட்­ட­டங்­களை தற்­கா­லி­க­மாக புறப்­ப­டுகை மற்­றும் வருகை முனை­யங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும், அவ்­வா­றான நடை­முறை பல நாடு­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­ வும் அவர் கூறி­யுள்­ளார்.

நிரந்­தர முனைய கட்­ட­டங்­களை இரண்­டா­வது கட்ட அபி­வி­ருத்­திப் பணி­யின் போது கட்ட முடி­ யும் என்­றும், முத­லில் வானூர்தி நிலை­யம் கணி­ச­மான வானூர்­திப் போக்­கு­வ­ரத்தை ஈர்த்­துக் கொள்ள வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வானூர்தி நிலை­யத்­துக்­கான மின்­சா­ரம், குடி­நீர் வச­தி­கள், வீதி, எரி­பொ­ருள் களஞ்­சி­யப்­ப­டுத்­த ல் வச­தி­கள் தொடர்­பா­க­வும் நீண்ட கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த வானூர்தி நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தன் மூலம், 

வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு அதி­க­ளவு நன்­மை­கள் கிடைக்­கும் என்­றும், வணிக மற்­றும் தொழில் வாய்ப்­பு­கள் கிட்­டும் என்­றும், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி அடை­யும் என்­றும் சிவில் வானூர்­ திப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு