25ம் திகதி வடக்கு மாகாணத்தில் ஹா்த்தால் அனுட்டியுங்கள், நீதிக்கான குரலை சா்வதேசத்திற்கு காட்டுங்கள்..

ஆசிரியர் - Editor I
25ம் திகதி வடக்கு மாகாணத்தில் ஹா்த்தால் அனுட்டியுங்கள், நீதிக்கான குரலை சா்வதேசத்திற்கு காட்டுங்கள்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு எதிா்வரும் 25ம் திகதி வடகிழக்கு காணாமல் ஆ க்கப்பட்டவா்களின் உறவினா்கள் பாாிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ள நிலையில், அன்றைய தினம் பூரண ஹா்த்தால் அனுட்டித்து நீதிக்கான குரலை உலகத்திற்கு காட்டுங்கள் எ ன காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கேட்டுள்ளனா். 

கத­வ­டைப்­புக்கு அழைப்பு

கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வடக்கு கிழக்கு மாகா­ணங்­கள் தழு­விய ரீதி­யில் எதிர்­வ­ரும் 25ஆம் திக­தி­யன்று மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டப் பேரணி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

அன்­றை­ய­தி­னம் காலை கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­ற­லில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள், மதத்­த­லை­வர்­கள், அர­சி­யற்­கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள், நிறு­வ­னம் சார்ந்த பிர­தி­நி­தி­கள், பொது அமைப்­புக்­கள், மாண­வர்­கள், 

மக்­கள் என அனை­வ­ரை­யும் அந்த ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்­தில் கலந்து கொண்டு கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்ள உற­வு­க­ளுக்கு நீதி­கி­டைக்க ஐக்­கிய நாடு­கள் சபை­யைக் கோர­வேண்­டும் என்று உற­வு­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ப­ட­வர்­க­ளு­டைய உற­வி­னர்­கள் தனியே நீதி கேட்­க­வில்லை, அனைத்து மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பும், அவா­வும் அதுவே என்­பதை ஐக்­கிய நாடு­கள் சபைக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்­காக அன்று வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் கத­டைப்பை மேற்­கொண்டு, 

போரா­டும் மக்­க­ளுக்கு ஆத­ரவு நல்­கு­மா­றும் உற­வு­கள் கோரி­யுள்­ள­னர்.

பேரணி
நீதி கோரிய ஆர்ப்­பாட்­டப் பேர­ணி­யா­ளது கிளி­நொச்சி கந்­த­சாமி ஆல­யத்­தில் ஆரம்­பித்து ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து டிப்­போ­சந்­தியை அடைந்து இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­க­ளின் அலு­வ­ல­கம் வரை செல்­லும் என்­றும், 

அங்கு ஐக்­கிய நாடு­க­ளின் இலங்­கைக்­கான பிர­தி­நி­தி­க­ளி­டம் மனு ஒன்­றும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது என­வும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

எமது உற­வு­கள், பிள்­ளை­க­ளுக்கு நீதி­கோரி இடம்­பெ­றும் இந்­தப் போராட்­ட­டத்­துக்கு முழு­மை­யான உணர்­வு­பூர்­வ­மான பங்­க­ளிப்­பினை வழங்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்­டத்­தின் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் சங்­கம் கோரி­யுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு