இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த 25 இலங்கை மீனவா்கள் கைது, கைதான மீனவா்கள் தொடா்பில் மாறுபட்ட கருத்துக்கள்..

ஆசிரியர் - Editor I
இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த 25 இலங்கை மீனவா்கள் கைது, கைதான மீனவா்கள் தொடா்பில் மாறுபட்ட கருத்துக்கள்..

இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் 5 படகுகளில் பிரவேசித்ததாகக் கூறி இலங்க்கை மீனவர்கள் 25 பேரை இந்தய கடற்படையினர் நேற்று மாலையில் கைது செய்து கொண்டுசென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து மீற்பிடிக்கச் சென்ற நிலையில். நேற்று மாலையில் 7 மணியை தாண்டிய நிலையில் இந்தியாவின் நாகை அருகே கைது செய்யப்பட்டதாக 

இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகுகளும் இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொண்டு செல்லபட்ட மீனவர்கள் இன்று இந்திய கரையோரக் காவல் படையினால் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை கடற்படைத் தரப்புக்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ஒரு படகும் 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவே இதுவரை உத்தியோகபூர்வமாக 

அறியக் கிடைத்துள்ளது. எனத் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு