எழுத்தாளா், ஊடகவியலாளா் தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் வெளியீடு 23ம் திகதி..

ஆசிரியர் - Editor I
எழுத்தாளா், ஊடகவியலாளா் தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் வெளியீடு 23ம் திகதி..

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிரு க்கிறது.

கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட    மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது. 

நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசர் தலைமை      தாங்கவிருக்கிறார். சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 

கலந்துகொள்ள விருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் எழுத்தாளர் 

செல்வமனோகரன் மற்றும்; எழுத்தாளர் வெற்றிச்செல்வி ஆகியோரும் வழங்கவுள்ளனர். இதே நாவலுக்கான அறிமுக நிகழ்வு பாரிஸ் மாநகரத்திலும் வரும் 10 ம் திகதி 

மார்ச் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு