பதின்ம வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல், ஆசிாியருக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
பதின்ம வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல், ஆசிாியருக்கு விளக்கமறியல்..

பாடசாலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிாியரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் வீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளாா். 

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றி ல் இன்று முற்படுத்தினர்

ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றி ல் காவற்துறையினர்  அறிக்கை தாக்கல் செய்தனர். சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்ட த்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார். 

எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பா ணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை வரும் மார்ச் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு