வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் ஆயுத கிடங்காம், காலையிலிருந்து தோண்டியும் எதுவும் சிக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் ஆயுத கிடங்காம், காலையிலிருந்து தோண்டியும் எதுவும் சிக்கவில்லை..

யாழ்.வடமராட்சி கிழக்கு- செம்பியன்பற்று தெற்கு பகுதியில் பாாிய ஆயுத கிடங்கு ஒன்று உள் ளதாக கூறி நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸாா் குறித்த பகுதியை தோண்டி வருகின்றனா். 

அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரு டைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளது. 

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. 

குறித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே அவ்வாயுத கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பைக்கோ மூலம் அகழ்வுகளை நடத்தி வருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு