40 ஆண்டுகள் பழமையான பாலம், 40 ஆயிரம் தடவை அதிகாாிகள், அரசியல்வாதிகளிடம் கூறியும் பயனில்லை, நோில் சென்றாா் ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
40 ஆண்டுகள் பழமையான பாலம், 40 ஆயிரம் தடவை அதிகாாிகள், அரசியல்வாதிகளிடம் கூறியும் பயனில்லை, நோில் சென்றாா் ரவிகரன்..

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் கற்சிலைமடு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கின்ற பத்துக்கண் பாலத்தினை கிட்டத்தட்ட 600குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.

குறித்த பாலம் கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலம் பாதிப்படைந்திருப்பதால், மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் அப்பகுதி மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம்  கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த பாலத்தினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 16.02.2019 நேற்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த பாலத்தினை மறுசீரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கனகரத்தினபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.கணேசன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.

பின்தங்கிய பகுதியான முத்துஐயன்கட்டு,இடதுகரைப் பகுதியில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இங்குள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குமான முக்கியமான பாலமாகத்தான் இப் பாலம் 1974ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் முத்துஐயன் கட்டுக் குளத்திலிருந்து வரும் நீராக இருந்தாலும்சரி, ஏனைய வெளி இடங்களிலிருந்து வரும் நீராக இருந்தாலும்சரி இந்ந பாலத்தினை கடந்துபோக முடியாமல் பாலத்திற்கு மேலால் வெள்ளம் 10அடி உயரத்திற்கு அதிகமாக வீதியை மூடி மழைக்காலங்களில் பாயும்.

இதனால் மழைக்காலங்களில் பாலத்தின் அருகிலுள்ள தோட்டங்கள், வீடுகளுக்குள்ளேயும் வெள்ள நீர் உட்புகும்புகும்.

மழைக் காலத்தில் அத்திய அவசிய தேவைகளுக்குக்கூட இப் பாலத்தினைக் கடந்து செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

1983ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக வெள்ள நீர் பாலத்திற்கு மேலால் பாய்ந்துள்ளது. அதன் பின்னரான காலப்பகுதிகளில் கிழமைக்கணக்கில் நீர் வீதியை மூடி பாய்ந்திருக்கின்றது.

திசம்பர் மாதங்களில் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர்.

இது தொடர்பாக நாங்கள் கடந்த காலங்களில் எல்லா முயற்சிகளை எடுத்திருந்தும், பலரிடம் இது தொடர்பில் பேசியிருந்தும் நிதிப் பற்றாக்குறையைக் காரணங்காட்டி செய்யாமல் விடப்பட்டிருந்தது.

கடந்த 2018 வெள்ளப்பெருக்கின்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் இங்கு நேரில் வந்து நிலமைகளை பார்வையிட்டிருந்தார். அவருக்கு இப்பாலத்தை மறுசீரமைப்பு செய்து தரவேண்டுமென மகஜர் கையளித்திருந்தோம். 

அவர் இதை எவ்வாறாயினும் செய்வதாகக்கூறியிருந்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடாக இதற்குரிய வேலைகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்திருக்கின்றார்.

இது கடந்த நற்பது ஐம்பது வருடங்களாக நாம் எடுத்த முயற்சிக்கான பலனாக நாங்கள் கருதுகின்றோம். என்றார்.

மேலும் இது தொடர்பில் முள்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கனகரத்தினபுரம் பத்துக்கண் பாலம் பற்றி கடந்த வெள்ளப்பெருக்கின்போது குறிப்பாக கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராலும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பாலம் கடந்த 1983ஆம் ஆண்டு காலப்பகதியில் குறித்த பாலத்தில் மூன்றுபேர் நீரில் மூழ்கி உயிரிளந்த சம்பவம், ஒவ்வொரு வருடமும் இந்தப் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கும்போது தாங்கள் கிட்டத்தட்ட 600ற்கும் 

மேற்பட்ட குடும்பங்கள் பாவிக்கும் இந்தப் பாலத்தால் படும் சிரமங்களையும், 1000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களை பாரமரிக்கும் பொருட்டு வரவேண்டிய விவசாயிகள்கூட இந்தப் பாலத்தினை கடந்துபோகவேண்டியிருப்பதால், 

பலத்த சிரமத்திற்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடம் தெரிவித்தேன். 

அந்த வகையில் இன்று அவரையும் இங்குஅழைத்துவந்து இந்தப் பாலத்தினைப் பார்வையிட்ட அதேநேரம் பாலத்துடன் சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் சாள்ஸ்நிர்மலநாதன் அவர்கள் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தார்.

இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

மிக முக்கியமான இந்த பாலத்தினை நிச்சயமாக செய்துகொடுக்கப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்துக்கண் பாலத்தினை கிட்டத்தட்ட 600 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பாலத்தினை பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

எனினும் குறித்த பாலம் இன்றுவரையில் அரசாங்கத்தால் இதற்குரிய நிதிகள் ஒதுக்கப்படவில்லை.

குறித்த பாலம் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குள் இந்த பாலம் இருப்பதனால் மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைவாக இருக்கும் காரணத்தினாலேயும் இந்த பாலம் இன்னும் மறுசீரமைக்கப்படாது இருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெறும் பிரதமருடைய கூட்டத்திலேயும், வடக்கு அபிவிருத்தி அமைச்சால் புனரமைக்கப்படவேண்டுமென்று கோரிக்கை முன்வைத்து 

அதற்குரிய வேலைகளை தொடர்ந்து எடுப்பேன். 50மில்லியன் பெறுமதியான இந்த பாலத்தினை செய்துகொடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும். உரியவர்களிடம் தெரிவிப்பேன் என்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு