மீள்குடியேறி 1 வருடமாகும் நிலையில், குடிப்பதற்கு தண்ணீா் கூட வழங்காத அரசாங்கம், 3 நாட்களுக்கு 5 லீற்றா் தண்ணீடன் மக்கள்..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேறி 1 வருடமாகும் நிலையில், குடிப்பதற்கு தண்ணீா் கூட வழங்காத அரசாங்கம், 3 நாட்களுக்கு 5 லீற்றா் தண்ணீடன் மக்கள்..

2018ம் ஆண்டு சித்திரை மாதம் இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில், குடிப்பதற்கு தண்ணீா் கூட இல்லாத நிலையில் மீள்குடியேறிய மக்கள் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். 

போா் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகியும் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப் படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 

200 படகுகளில் இரணைமாத நகரில் இருந்து இரணை தீவில் சென்று குடியேறினர். மீள் குடியேறி ஒரு வருடம் கடக்கப் போகின்ற நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் தங்களை பாரமுக மாக நடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தங்கள் குடியேறிய பின்னரும் இதுவரை குடிநீர் வசதியோ போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கு றித்த பிரதேசத்தில் அனைத்து கிணறுகளில் உள்ள தண்ணீர் உவர் தண்ணீராக 

காணப்படுவதனால் அதனை குடிக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும், கடற்படையி னரால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடும்பம் ஒன்றிற்கு 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுவதாக வும் அதுவும் எப்போதாவது ஒரு முறை தருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவசர நிலமையோ அல்லது திடீர் சுகயீனம் ஏற்படும் போது முதலுதவியோ அவ சர சிகிச்சையோ வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் அச்ச நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று முழுமையாக மின்சார வசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செ ல்வதற்கும் நடமாடுவதும் ஆபத்தாக அமைவதாக அந்த மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ள னர். தங்கள் குறைகளை கேட்பதற்கு அரச அதிகாரிகளோ 

கிராம அலுவலகர்களோ இரணைதீவிற்குள் வருவது குறைவாகவே காணாப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் தாங்கள் பூர்வீக கிராமத்தில் குடியேறி விட்டோம் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஏனைய அனைத்து துன்பங்களையும் 

தாங்கி வாழ்ந்து வருவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு வீடுகளை அமைத்து தரா விட்டாலும் தங்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொ ள்ள முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த மக்களின் பிரச்சினை தொடராக அறிந்து கொள்வதற்காக நேற்றைய தி னம் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பக அதன் குழு தலைவர் ஜாட்சன் தலைமை யில் குழு ஒன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு