இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தில் அரசியலா..? சகுனி ஆட்டத்தை ஆரம்பிக்கும் பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தில் அரசியலா..? சகுனி ஆட்டத்தை ஆரம்பிக்கும் பிரதமா் ரணில்..

இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் விநியோக திட்டத்தில் அரசியல் பிரச்சினையே உள்ளது என  நீா் வழங்கல் மற்றும் உயா்கல்வி அமைச்சா் ரவூப் ஹக்கீம், கூறியிருக்கும் நிலையில், அங்கே அர சியல் எதுவும் இல்லை. என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறியுள்ளாா். 

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட அபி விருத்திக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 

இரணைமடுவில் எந்த அரசயிலும் இல்லை. அப்படி பார்த்தால் கிளிநொச்சியில் நானூறு குளங்க ள் உண்டு எனவே அவற்றுக்குப் பின்னாள் நானூறு அரசியல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டு செல்வதற்கு 

மாறாக பாலியாறு மற்றும் ஆறுமுகம் திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும். இரணைமடுவுக்கு கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் சிறுபோகம் செய்ய முடியும் ஆனால் தற்போது குளம் உயர்த்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ஏக்கர் வரை சிறுபோகம் மேற்கொள்ள முடியும் 

எனவே எவ்வாறு மேலதிக நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியும்? எனக்கேள்வி எழுப்பி னார். இதன் போது கருத்துரைத்த பிரதமர் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் தொடர்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன், 

மற்றும் மத்திய, மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடி அறிக் கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு