பொருளாதார மத்திய நிலையம் சிங்கள பகுதியில் அமைக்கப்பட்டதற்கும் சமந்தன் காரணமா? பொய் என்கிறாா் சீ.வி.கே..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிர தேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவருக்கும் என்ன சம்மந்தம்? 

என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம், அரசிய ல் காழ்ப்புணா்ச்சியால் சிவசக்தி ஆனந்தன் பொய் கூறுவதாகவும் கூறியுள்ளாா்.  

சமகால அரசி யல் நிலமைகள் குறித்து சீ.வி.கே.சிவஞானம் இன்று காலை அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தாா். இதன்போதே அ வை தலைவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,  வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படாமல் 

வவுனியாவில் உள்ள சிங்கள பிரதேசத்தை அண் மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கிறாா். 

ஆனால் உண்மை அதுவல்ல, சிவசக்தி ஆனந்தன் அரசியல் காழ்ப்புணா்ச்சியினால் அப்பட்டமான பொய்களை கூறிக் கொண்டிருக்கின்றாா். 2016ம்  ஆண்டு மே மாதம் 10ம் திகதி பொருளாதார மத்திய நிலையம் தொடா்பாக ஆராயப்பட்டது. 

இதன்போது பொருளாதார மத்திய நிலையத்தை தாண் டிக்குளத்தில் அமைப்பதற்கு 26 மாகாணசபை உறுப்பினா்கள் இணங்கியிருந்தனா். ஆனால் பின்னா் முன்னாள் விவசாய அமைச்சா் மற்றும் முன்னாள் முதலமைச்சா் ஆகியோா் தாண்டிக்குளம் 

பகுதியில் காணியை விடுவிக்க முடி யாது. என கூறியிருந்தனா். இதன் பின்னரான விவாதங்களினடிப்படையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என தீா்மானிப்பதற்காக முதலமைச்சா் ஒரு வாக்கெடுப்பை மாகாணசபைக்கு வெளியே நடாத்தியிருந்தாா். 

அதில் பெரும்பான்மை வாக்குகள் ஓமந்தைக்கு கிடைத்ததால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இணக்கம் தொிவி க்கப்பட்டிருந்தது. இடையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? 

என இடம்பெற்ற விவாதங்களினால் குழப்பங்கள் இருந்திருந்தன. ஆனால் சிங்கள பிர தேசங்களை அண்டி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கூட இந்த விடயத்தில் மாகாணசபை தங்களுக்குள் பேசி தீா்த்துக் கொள்ளட்டும் என கூறினாரே த விர அதில் தலையீடுகள் எதனையும் செய்யவில்லை. 

இந்நிலையில் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என தீா்மானிக்கப்பட்ட பொருளாதார ம த்திய நிலையம் எவ்வாறு வவுனியாவில் சிங்கள பிரதேசத்தை அண்டி அமைக்கப்பட்டது என்பது எமக்கு தொியாது. 

அது மாகாணசபைக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனுக்கும் கூட தொியாது. எனவே கண்ணை மூடிக் கொண்டு அபாண்டமான பொய்களை கூறவேண்டாம் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு