பொலிஸாரை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த 3 பேருக்கு பிணை, அடையாள அணிவகுப்பிலும் அடையாளம் காணப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த 3 பேருக்கு பிணை, அடையாள அணிவகுப்பிலும் அடையாளம் காணப்பட்டனா்..

யாழ்ப்பாணம்- கொடிகாமம் கெற்பேலி பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாா் மீது உழவு இயந் திரத்தால் மோதி தாக்குதல் நடாத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்ட 3 போ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்கள். 

கொடி­கா­மம் கெற்­பே­லி­யில் ஜன­வரி 14 ஆம் திகதி இரவு சட்­ட­வி­ரோ­த­மாக மணல் ஏற்­றப்­ப­டு­வ­ தா­கக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பொலிஸ் நிலைய உப பரி­சோ­த­க­ரும் 3 பொலிஸ் அலு­வ­லர்­க­ ளும் உந்­து­ரு­ளி­யில் சம்­பவ இடத்தை நோக்­கிச் சென்­றுள்­ள­னர். 

வழி­யில் மணல் ஏற்­றி­ய­படி வாக­னம் வந்­து­கொண்­டி­ருந்­தது. நிறுத்­து­மாறு பொலி­ஸார் கூறி­ய­ போது அவர்­களை வாக­னத்­தால் மோதி­விட்டு வாக­னச் சாரதி வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­ யோ­டி­யுள்­ளார்.

அங்கு நின்ற ஏனைய பொலிஸ் அலு­வ­லர்­கள் பொலிஸ் நிலை­யத்­துக்­குத் தக­வல் அனுப்­பி­விட்டு காய­ம­டைந்த உப பரி­சோ­த­கரை உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றிக் கொண்டு வரும்­வ­ழி­யில் வாக­னங்­ க­ளில் துரத்தி வந்­த­வர்­கள் பொலிஸ் அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­விட்டு உழவு 

இயந்­தி­ரப் பெட்­டிக்­குள் காய­ம­டைந்த நிலை­யில் காணப்­பட்ட உப பரி­சோ­த­கரை தரை­யில் இறக்கி வைத்­து­விட்டு வாக­னத்­தைக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­ பாக முத­லில் இரு­வ­ரும் பின்­னர் ஒரு­வ­ரும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு 

நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு கடந்த 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­ னர். அன்று அடை­யாள அணி­வ­குப்பு பலத்த பாது­காப்­பு­டன் நடத்­தப்­பட்­டது. நான்கு பொலி­ஸா­ ரில் இரு­வர் சாட்­சி­க­ளாக வருகை தந்து இரு­வரை அடை­யா­ளம் காட்­டி­னர். 

னைய இரு­வரையும் அடை­யா­ளம் காண்­பிப்­ப­தற்­காக நேற்­று­வரை வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ டது. நேற்று இரு பொலிஸ் அலு­வ­லர்­க­ளும் சாட்­சி­க­ளாக வருகை தந்து பதில் நீதி­வான் ப.குக­ னேஸ்­வ­ரன் முன்­னி­லை­ யில் நடை­பெற்ற அடை­யாள அணி­வ­குப்­பில் 

இரு­வ­ரை­யும் அடை­யா­ளம் காட்­டி­னர். வழக்கு நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது மூன்று சந்­தேக நபர்­க­ளும் தலா 5 லட்­சம் ரூபா ஆள்­பி­ணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு