காணிகளை தாருங்கள் உங்களுக்கு வாக்களிப்பதை பற்றி பின்பு பேசலாம், பிரதமருக்கு முறையாக கொடுத்து அனுப்பிய மயிலிட்டி மக்கள்..

ஆசிரியர் - Editor I
காணிகளை தாருங்கள் உங்களுக்கு வாக்களிப்பதை பற்றி பின்பு பேசலாம், பிரதமருக்கு முறையாக கொடுத்து அனுப்பிய மயிலிட்டி மக்கள்..

மயிலிட்டியில் வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு சென்ற பிரதமா் ரணில் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினா், தோ்தல் பரப்புரை நடாத்திய நிலையில், மயிலிட்டி மக்கள் தக்க பதில  டி கொடுத்து திருப்பி அனுப்பியிருக்கின்றாா்கள். 

மயி­லிட்­டி­யில் வீட்­டுத் திட்­டத்­துக்கு அடிக்­கல் நடு­வ­தற்கு பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க நேற்­றுச் சென்­றி­ருந்­தார். அடிக்­கல் நடுகை செய்த பின்­னர், அந்­தப் பகு­தி­யில் திரண்­டி­ருந்த மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சென்­றி­ருந்­தார்.

தங்­கள் காணி­கள் இன்­ன­மும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அவற்றை விரை­வாக விடு­விக்­கு­மாறு மக்­ கள் கோரிக்கை விடுத்­த­னர். அதற்கு இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், எங்­கள் கட்சி ஆட்­சிக்கு வந்த பின்­னர்­தான் காணி­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன என்று கூறி­னார். 

இன்­ன­மும் காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன என்று மக்­கள் பதில் தெரி­வித்­தார்­கள். நீங்­ கள் மீண்­டும் ஐயாவை (பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­சிங்க) வாக்­க­ளித்து வெற்­றி­பெ­றச் செய்­தால் உங்­கள் காணி­களை விடு­விக்க முடி­யும் என்று இரா­ஜாங்க அமைச்­சர் கூறி­னார். 

நீங்­கள் எங்­கள் காணி­களை விடு­வித்­தால் உங்­க­ளுக்கு நாங்­கள் வாக்­க­ளிக்­கின்­றோம் என்று அந்த மக்­கள் பதி­லடி கொடுத்­த­னர். பிரதமா் உள்­ளிட்ட குழு­வி­னர் அங்­கி­ருந்து நகர்ந்­த­னா். இதன்போது அங்கே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களும் இருந்தனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு