யாழ்.மாவட்டத்திலிருந்து கொழும்பு சென்ற இரு பேருந்துகள் மீது கல்வீச்சு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலிருந்து கொழும்பு சென்ற இரு பேருந்துகள் மீது கல்வீச்சு..

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்கள் மீது விசமிகளால் கல் எறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அன்னை முத்துமாரி .மற்றும் N.C.G என்ற  இரு பஸ்களின் மீதே கல் எறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் செம்மணி வீதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த  கல் எறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பஸ்களின் முன் கண்ணாடி சேதமடைந்தன.

யாழ்.பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். போட்டி காரணமாக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் 

என்று பஸ் காரர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பஸ்கள் வீதியில் நீண்ட நேரம் தொடர்ந்து பயணிக்காமல் நின்றதால் பயணிகள்  சிரமங்களை எதிர்கொண்டனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு