“ஐ” றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியுள்ளது, நாடாளுமன்ற உறுப்பினா்கள் சரமாாி கேள்வி, பதறிய அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
“ஐ” றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியுள்ளது, நாடாளுமன்ற உறுப்பினா்கள் சரமாாி கேள்வி, பதறிய அதிகாாிகள்..

2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கும் நிலையில், எப்போது நடைமுறைப்படுத் துவீா்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளாா். 

இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடைமுறை ப்படுத்துங்கள் என பிரதமா் ரணில் விக்கிரம சிங்கள அதிகாாிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாா். 

இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில், ஐ றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? 

என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா். இதற்கு பதில ளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாாி, இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தாா். 

அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பினாா். தொடா்ந்து கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஐ றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறினாா். 

இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாாியுடன் பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினாா். 

இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாாிகள் உறுதியளித்தனா். மேலும் ஐ றோட் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் என்பதுடன், 

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 206.08 கிலோ மீற்றா் நீளமான 53 வீதிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான 105.40 கிலோ மீற்றா் நீமான 116 வீதிகளும் புனரமைப்பு செய்யப்ப டவுள்ளது. இதற்காக 40352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு