கட்டுத்துவக்கு மற்றும் வாளுடன் இருந்த கசிப்பு வியாபாாி, வீட்டுக்குள் புகுந்து மடக்கி பிடித்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
கட்டுத்துவக்கு மற்றும் வாளுடன் இருந்த கசிப்பு வியாபாாி, வீட்டுக்குள் புகுந்து மடக்கி பிடித்த பொலிஸாா்..

கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் ஒருவரை பளை பொலிசார் கைது செய்துள்ளனர். 

யாழ்.உடுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 

அவ்விடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.  அதன் போது ஒரு தொகை கசிப்பு , கட்டுத்துவக்கு மற்றும் வாள் 

என்பவற்றை வீட்டில் இருந்து பொலிசார் மீட்டனர். அத்துடன் வீட்டில் இருந்த நபரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றில் பரப்படுத்தினார்கள். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு