காணாமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி அலைந்த மூன்று மாவீரர்களின் தாய் மரணம்!

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி அலைந்த மூன்று மாவீரர்களின் தாய் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த - மூன்று மாவீரர்களின் தாயார், பிள்ளையைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மாரடைப்பால் மரணமானார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மரணமானவராவார்.

இவர் வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாராவார். கடற்புலி போராளியான சுவித்தா என்ற அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். காணாமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி அலைந்த நிலையில், அவர் நேற்று மரணமானார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு