வடமாகாணத்தின் கல்வி மேம்பாட்டக்கு உதவுங்கள், இந்திய பல்கலைக்கழக பிரதநிதிகளிடம் ஆளுநா் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் கல்வி மேம்பாட்டக்கு உதவுங்கள், இந்திய பல்கலைக்கழக பிரதநிதிகளிடம் ஆளுநா் கோாிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 11ம், 12ம் திகதிகளில் இடம்பெற்ற இந்திய கல்வி கண்காட்சியில் கல ந்து கொண்டிருந்த இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சாா்ந்த பிரதி நிதிகள் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை இன்று காலை சந்தித்து பேசியுள்ளனா். 

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக  பீடங்களுக் கி   டையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண மாணவர்கள் 

புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் இதுதொடர்பில் யாழ் இந்திய துணைத்தூரகத்தின் உதவியுடன் இதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தூதுக்குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர் வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்ததுடன் மாணவர் பரிமாற்றம் தொடர்பில் 

இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது இந்திய தூதுரகத்தின்துணைதூதுவர்எஸ். பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு