வீதியில் பயணித்த பெண்களை மோதி தள்ளிவிட்டு, தாலி கொடியை அறுத்த கும்பல்..

ஆசிரியர் - Editor I
வீதியில் பயணித்த பெண்களை மோதி தள்ளிவிட்டு, தாலி கொடியை அறுத்த கும்பல்..

யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலியை அறு த்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாக்கிழமை மாலை நடை பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழில். இருந்து அராலியை நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , தமது முகத்தினை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள் , 

பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர். விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத்திய கொள்ளையர்களு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது , 

திடீரென கொள்ளையர்கள் பெண்ணொருவர் அணிந்திருந்த தாலி கொடியினை அறுத்துக் கொ ண்டு தப்பி ஓடியுள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு