ஐ.நாவின் கடுமையான அழுத்தம், 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் நுண்கடனை தள்ளுபடி செய்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவின் கடுமையான அழுத்தம், 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் நுண்கடனை தள்ளுபடி செய்கிறது அரசு..

நுண்கடன் பெண்ண 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்ப டவுள்ளது. இதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வைத்து நிதியமை ச்சா் மங்கள சமரவீரவினால் வழங்கப்படவுள்ளது. 

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்­வில் நுண் நிதிக் கடன் தொடர்­பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்­ கை­யா­ளர் முன்­வைத்­துள்ள அறிக்கை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் இந்­தச் செயற்­பாடு அர­ சால் முன்­னெ­டுக்­கப் ­பட்­டுள்­ளது.

2017ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில்  வடக்­கில் அதி­க­ள­வில் நுண்­நி­திக் கடன்­கள் பெறப்­பட்­டன. பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளால் அவை அதி­க­ள­வில் பெற்­றுக் கொள்­ளப்­பட்­டன.

நுண்­நி­திக் கடன்­களை மீளச் செலுத்த முடி­யா­மல் பலர் தவ­றான முடி­வு­களை எடுத்து உயி­ரி­ழந்­ த­னர். நுண்­நி­திக் கடன்­களை வசூ­லிக்­கச் செல்­வோர் வரம்பு மீறிச் செயற்­பட்­ட­து­டன், பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளி­டம் பாலி­யல் லஞ்­ச­மும் கோரப்­பட்­டி­ருந்­தது.

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் நுண்­நி­திக் கடன்­களை தள்­ளு­படி செய்­யும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அமை­வாக வடக்­கைச் சேர்ந்த 700 பெண் தலை­ மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் நுண்­நி­திக் கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

நுண்­நி­திக் கட­னைத் தள்­ளு­படி செய்­த­மைக்­கான சான்­றி­தழ், நாளை மறு­தி­னம் வியா­ழக்­கி­ ழமை இடம்­பெ­றும் நிகழ்­வில் வைத்து பய­னா­ளி­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு