தெல்லிப்பழை- கட்டுவனில் பயங்கரம், கணவன், மனைவி மீது கொள்ளையர்கள் மூர்த்தனமான தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
தெல்லிப்பழை- கட்டுவனில் பயங்கரம், கணவன், மனைவி மீது கொள்ளையர்கள் மூர்த்தனமான தாக்குதல்..

யாழ்.தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது டன் வீட்டிலிருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

அரசாங்க ஊழியர்களான கணவன் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கிய நிலையில் கொள் ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருடர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்த மனைவிக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. கணவனின் தலையில் தாக்கப்பட்டமையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் புலம் வீதிஇ கட்டுவன் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. வீட்டின் குளியலறை ஜன்னல் ஊடாக வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். நித்திரையில் இருந்த வீட்டாரை எழுப்பி 

அவர்களைக் கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். வீட்டை சல்லடை போட்டு தேடிய திருடர்கள் தாலிக் கொடி காப்பு சங்கிலி உள்பட 17 பவுண் நகை 20 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உப அதிபராகக் கடமையாற்றுபவருடைய வீட்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார்.

சம்பவம் தொடர்பில் குற்றத் தடவயவியல் பொலிஸார் மோப்ப நாய்களுடன் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு