பிரபல கொள்ளைக்காரன் மற்றும் போதைவஸ்த்து கடத்தல்காரனுக்கு தமிழீழ விடுதலை புலிகள் பாணியில் தண்டணை..

ஆசிரியர் - Editor I
பிரபல கொள்ளைக்காரன் மற்றும் போதைவஸ்த்து கடத்தல்காரனுக்கு தமிழீழ விடுதலை புலிகள் பாணியில் தண்டணை..

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் போதைவஸ்த்து கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவரை பொது ம க்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனர். 

அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளை ஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். 

இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளி ன் பாணியில் தண்டனை கொடுக்கப்பட்டதுடன் இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு வீதியில் இழுத்து செல்லப்பட்டார். 

பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலை த்தளங்களில் பரவி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு