நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் மோதியதில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் இருவர் படுகாயம், பூநகரியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் மோதியதில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் இருவர் படுகாயம், பூநகரியில் சம்பவம்..

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8.40 மணியளவில் யாழ்ப்பாணம்- மன்னார் வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த பார ஊர்தியானது தரித்து நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஐஙயும் இல்லாத நிலையில் யாழ் நோக்கிய திசையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

அதே திசையில் பயணித்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக 

பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.விபத்தில் வானில் பயணித்த மூவரில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், 

சாரதி மற்றும் மேலுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 

43 வயதுடைய சுவேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு