கிளிநொச்சி- அம்பாள்குளம் பகுதியில் பதற்றம்..! முன்னாள் போராளியின் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள்..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- அம்பாள்குளம் பகுதியில் பதற்றம்..! முன்னாள் போராளியின் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள்..!

திருகோணமலையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டிரு க்கும் கிளிநொச்சி இளைஞனின் வீட்டில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், மற்றும் து ப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த முன்னால் போராளியான குறித்த நபரிடம் மெற்கொள்ளப்பட்ட விசாரணைின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள கைதானவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

குறித்த வீட்டில் கைதானவரின் மனைவி மற்றும் பிள்ளை தங்கியிருந்தனர். கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணை்து குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்தினர். குறித்த சோதனை நடவடிக்கையின்போது

ரி56 ரக துப்பாகிள் 1, சிறய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, லப்ரப் 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், 

வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு