தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பாாிய திட்டம்..! களுத்துறை- கதிா்காமம் இடையில் அதியுச்ச பாதுகாப்பால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பாாிய திட்டம்..! களுத்துறை- கதிா்காமம் இடையில் அதியுச்ச பாதுகாப்பால் பரபரப்பு..

களுத்துறை தொடக்கம் கதிா்காமம் வரையான பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை மேற்கொள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை அடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்க பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்துக்கள் உள்ளதாகவும், 

அதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு 

ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு கோரிய பல்லைக்கழகத்தின் பீடாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு