சகல அறிக்கைகளும் வெளியாகவேண்டும், அதற்கு முன் அவசரப்படாதீா்கள்..! சட்டத்தரணிகள் கோாிக்கை.

ஆசிரியர் - Editor I
சகல அறிக்கைகளும் வெளியாகவேண்டும், அதற்கு முன் அவசரப்படாதீா்கள்..! சட்டத்தரணிகள் கோாிக்கை.

மன்னாா்- மனித புதைகுழி தொடா்பான சகல அறிக்கைகளும் வெளியாவதற்கு முன் னா் அது குறித்த இறுதி தீா்மானத்திற்கு வர முடியாது. என காணாமல் ஆக்கப்பட்டவா் களின் உறவினா்கள் சாா்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தொியப்படுத்தியுள்ளனா். 

இது தொடர்­பில் நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சகல அறிக்­கை­க­ளும் வெளி­யா­கும் வரை பொறுமை காக்க வேண்­டி­யுள்­ளது. கார்­பன் கால நிர்­ணய அறிக்­கை­யின் மூலப்­பி­ரதி மன்­னார் நீதி வான் ரி.சர­வ­ண­ரா­ஜா­வி­டம் அண்­மை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மன்­னார் மனித புதை குழி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட எச்­சங்­கள் சுமார் 350 வரு­டங்­கள் தொடக்­கம் 600 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளு­டை­யவை என்று கார்­ பன் கால நிர்­ணய அறிக்­கை­யில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நவீன தொழில் நுட்­பத்­துக்­கான உள்­ளீ­டு­கள், விஞ்­ஞான ரீதி­யான கண்­டு­பி­டிப்­பு­க­ளும், மானுட தட­ய­வி­ய­லு­டன் தொடர்­பு­டைய விட­யங்­க­ளும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

இது தொடர்­பில் துறை­சார் நிபு­ணர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றோம். புதை­கு­ ழி­யில் கண்டு பிடிக்­கப்­பட்ட வேறு சான்­று­கள் மற்­றும் தட­யப்­பொ­ருள்­கள் உள்­ளிட்­ட­ வற்­றின் முழு­மை­யான ஆய்­வ­றிக்­கை­யின் பின்­னரே 

இறு­தித் தீர்­மா­னத்­துக்கு வர முடி­யும். ஏனைய ஆய்­வு­க­ளின் அறிக்கை மற்­றும் மனி­தப் புதை­கு­ழி­யில் பணி­யாற்­றும் நிபு­ ணர்­க­ளின் கருத்­துக்­கள் தொடர்­பி­லும் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும் – என்று அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு