இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவா்கள் எங்கே? ஆட்கொணா்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவா்கள் எங்கே? ஆட்கொணா்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது..

ஆள்கொணர்வு மனு மீதான 2 ம் கட்ட விசாரணை ஜூன் 25 ம் திகதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆ க்கப்பட்டவர்களின்   வழக்குகள் 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலே  இடம்பெற்று வந்தது அந்த வகையிலே ஒரு பகு தியினரது   ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு தற்போது வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கு இடம்பெறுகின்ற நிலையில்  

இரண்டாவது கட்டமாக தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகள் இன்றைய தினம் முல்லை த்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் தலைமையில் 

நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரட்னவேல் அவர்கள் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு