மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மன்னாா் நகா் பகுதியில் கிளைமோா் குண்டு மீட்பு. தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மன்னாா் நகா் பகுதியில் கிளைமோா் குண்டு மீட்பு. தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸாா்.

மன்னாா் நகா் பகுதியில் குப்பைக்குள்ளிருந்து ஆபத்தான கிளைமோா் குண்டு ஒன் று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

மன்னார் - பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல் லும் பிரதான பாதை சந்தியிலிருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நி லையில் குப்பைக்குள் இருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், 

சுமார் 3 கிலோ கிராம் நிறையுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் 

கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் குறித்த வெடி பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு